காத்திருக்கிறார்கள்
திருவோட்டுடன்
கோவில் வாசலிலே
பிச்சைக்காரர்கள் ...
...கருவறைக்கு சென்று
கண்டதெல்லாம் வேண்டுமென
கண் மூடி வேண்டுகின்றனர்
பக்தர்கள் ...
பிரார்த்தனைகளுக்கு
பிரதி உபகாரம் கேட்டு
ஆலயம் முழுக்க
ஆளுயரம் நிற்கிறது
உண்டியல்கள் ...
உண்மையில்
யாசிப்பது எவர் என
நானறியேன் பராபரமே !
No comments:
Post a Comment