Friday, 30 September 2011

விடுமுறை நாளொன்றில்..


அம்மாக்களின்
அடுப்படி வேலை இரட்டிப்பாகும்!

குழந்தைகளின் கூச்சலால்
தெருக்கள் நிறைக்கும்!

ரிமோட்களின் கை மாறலால்
தொலைக்காட்சிபெட்டி விசும்பும்!

பிள்ளைகளின் சப்தமின்றி
பள்ளிகள் ஏங்கும்!

தந்தைகளின் விடுமுறைகளை
சுப நிகழ்சிகள் விழுங்கும்!

எப்பொழுதும் போல் இவர்களை
திங்கள்கள் திரும்பி அழைத்துகொள்ளும்!